பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை கண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
ஜனநாயக விழுமியங்களை போற்றும் அனைவரும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கண்டிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறை மூலம் எமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அரசியல்வாதிகள் இதனை குறுகிய, அரசியல் இலாபநோக்கில் இதை பார்க்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினர்.
தான் ஜனாதிபதியாக இருந்த போது, நீதிசேவை உத்தியோகத்தர்களின் நடத்தையை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசினால் 2000 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டமூலத்தில் கூறப்பட்ட சட்டங்களை கொண்டு வருவதற்கும் நிலையியல் கட்டகளை திருத்துவதற்கு பதிலாக ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசியல் சட்டத்தையும் நிலையியற் கட்டளைகளையும் ஒரு சுதந்திர கட்சி அரசாங்கம் பின்பற்றுவதையிட்டு தான் ஆச்சர்யப்படுதவதாக அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக