வெள்ளி, 8 மார்ச், 2013

பொது பல சேனா மீது கடும் நடவடிக்கை - ஹெகலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

News Serviceநாட்டின் சட்டத்தை கையிலெடுத்து உத்தியோகபூர்வமற்ற பொலிஸார் போல், செயற்பட ஆரம்பித்தால் அரசின் உத்தியோக பொலிஸார் பொது பல சேனா உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அமைச்சரைவப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில்நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னேற்றமடைய ஹலால் சான்றிதழ் அவசியம் என்பது இப்பொது உணரப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் இல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது நாட்டின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த முடியாது.எனினும் உள்ளுர் சந்தை வாய்ப்புக்களுக்கு இதுவல்லாத வேறு வழிமுறையொன்றைக் கையாள இரு தரப்பினரும் ஒரு இணக்கத்துக்கு வந்தால் அதனை அரசு வரவேற்கும். ஒரு நடவடிக்கை முடிவுக்கு வந்தால் எதிர் நடவடிக்கையும் ஒழிந்துபோகும். எக்காரணம் கொண்டும் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசு பொறுப்பேற்காது. அதேவேளை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் சீரழிக்க எவருக்கும் அரசு இடமளிக்காது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக