செவ்வாய், 29 மே, 2012

பண்டத்தரிப்பில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்ப்பாணம் இளவாலை பண்டத்தரிப்பில் 32 வயது பெண் காணாமல் போயுள்ளதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் இன்று (29) செவ்வாய்கிழமை காலை முறையிடப்பட்டுள்ளது. குறித்த யுவதி தொழில் நிமித்தம் யாழ். நகரப்பகுதிக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றவர் எனவும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிய போதும் கண்டுபிடிக்கப்பட வில்லை எனவும் அவரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சத்தியநாயகி என்ற பெண்ணே காணாமல் போனதாகவும் அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக