செவ்வாய், 11 டிசம்பர், 2012

வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த

News Serviceஇனங்களுக்கு இடையிலான குரோத உணர்வு நீடிக்க இடமளிக்கக் கூடாது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது மிகப் பெரிய பாவச் செயலாகும். 30 ஆண்டுகால போரின் பின்னர் இனங்களுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் மனங்களிலிருந்து குரோத உணர்வுகளை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எங்களது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். வேறு வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைவரும் சமமானதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற இந்து ஆலய மேம்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக