
இது தொடர்பாக கஜேந்திரகுமார் அவர்கள் இன்று கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பிலுள்ள எனது வீட்டுக்கு நேற்றுக்காலை தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அந்தத் தொலைபேசி அழைப்புக்கு எனது தாயார் பதிலளித்தார்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் தலைமையகத்திலிருந்து பேசுவதாகக் கூறிய ஒருவர், எனது முழுப்பெயரையும், விலாசத்தையும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கோரியதாகக் கூறியுள்ளனர்.
அத்துடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் அறிக்கையொன்று தயாரிக்கப்படுகிறது. அந்த அறிக்கையை என்னிடம் கையளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் எனது தாயார் எனது முழுப்பெயரையும், விலாசத்தையும் குறித்த அதிகாரிக்கு வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், நேற்று மாலை எனது வீட்டுக்கு சிங்களத்தில் எழுதப்பட்ட அறிவித்தலொன்று வந்துள்ளது. அந்த அறிவித்தலில் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயத்திற்கு விசாரணைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நான் அவசர தேவை நிமிர்த்தம் வெளிநாடு பயணமானேன். நான் நாடு திரும்பியவுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரின் அழைப்புக் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக