திங்கள், 31 டிசம்பர், 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் – அரசாங்கம

TNA உடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் – அரசாங்கம்தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அமர்வுகளின் மூலமே 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு தயார் எனவும், எனினும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளின் மூலமாக எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எந்த நேரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும், பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக