புதன், 17 ஏப்ரல், 2013

இந்திய பணியாளர்களை முழுமையாக வெளியேற்ற மஹிந்த உத்தரவு

இலங்கையில் கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய பயணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த மஹிந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது.இலங்கையின் முதலீட்டு சபையிடம் இந்திய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதை நிறுத்த மஹிந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பதனை தொழில் அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே கூறுகையில், கட்டுமானத் திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்ற பணியாளர்களை இலங்கை அரசாங்கம் பணியில் ஈடுபடுத்த இருக்கிறது.இலங்கை அரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனத்தின் படியே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களில் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்து வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இந்தியப் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கணிசமாகக் குறைக்கப்படும்.கொழும்பு டாக்யார்ட் நிறுவனத்தில் சுமார் 800 இந்தியப் பணியாளர்களும், உருக்கு தொழிற்சாலைகளில் 1500க்கும் அதிகமான இந்தியப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷவின் இந்த நகர்வானது இந்திய அரசுக்கு எதிராக சிங்கள மக்களின் எதிர்ப்பினை ஆதரிக்கும் அணுகுமுறையாக பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக