வியாழன், 26 செப்டம்பர், 2013

காணாமற் போனவர் சடலமாக மீட்பு!

newsமுகமாலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காணாமற் போனவர் சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் இதயராஜா சுதாகரன் (வயது 27) என்று இனங்காணப்பட்டுள்ளார். முகமாலை முன்னரங்கப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக டிராக்டரில் மூன்று பேர் சென்றுள்ளனர்.கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசத்தினுள் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரையில் உள்சென்றுள்ளனர்.அப்போது தாங்கி எதிர்ப்பு மிதிவெடியில் இவர்களது டிராக்டர் சிக்கியுள்ளது.இதில் பயணம் செய்த மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். காயமடைந்த நிலையில் குகானந்தன் ராசா (வயது 17), துரைசிங்கம் நிரோஜன் (வயது 17) இருவரும் நேற்று முன் தினம் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். எஞ்சிய ஒருவர் காணாமற் போடியிருந்தார்.இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. சடலம் தற்போது கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக