புதன், 7 மார்ச், 2012

வாரம் ஒரு கலை வித்தகன்


இந்த வாரம் இலங்கையின் புகழ் பெற்ற  கலை வித்தகன் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.இவர் இறைவரித் திணைக்களத்தில் தொழில் பார்த்தவர்.சமாந்தரமாக கலை வாழ்வில் புகுந்து
மிகப் பெரும் ஜன ரஞ்சக நடிகனாக உயர்ந்தவர்.
அண்ண ரயிட் பாலச்சந்திரன் என்றாலே தெரிந்து கொள்ளக் கூடியஅளவுக்குபட்டி தொட்டி எங்கும் தனி நடிப்பினால் கலக்கு கலக்கியவர். ஓடலி ராசையா என்கின்ற நாடகமும் இவருக்கு முத்திரை பதித்தது.பின்னர்


வாடைக்காற்று கலியுக காலம்  அவள் ஒரு ஜீவநதி போன்ற திரைப் படங்களில்
நடித்துப் புகழ் அடைந்தார்.இது மட்டுமன்றி வானொலி நாடகங்களில் மிக அதிகளவில்
  நடித்தார்.தணியாத தாகம்  நாடகத்தில் சோமு என்னும் பாத்திரத்தில் நடித்து நம் 
கண்களைக் குளமாக்கினார்.  நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் 
இடம் பெயர்ந்து கனடா சென்ற இவர் அங்கும் கலை வாழ்வை மறவாமல் தொடர்ந்தும் பணியாற்றி
வருகிறார்.கனடியத் தொலைக் காட்சி ஒன்றில் வொன்டபுள் வைத்திலிங்கம்
என்னும் தொடரை நடாத்துவதுடன் அதிகளவில் நாடகங்களை எழுதி இயக்கி
நடித்தும் வருகிறார்.இவர் யாழ் நகரில் நாடத்திய கதம்ப மாலை நிகழ்வில் என்னையும்
பாடகனாக்கி  எஸ்.கே.ராஜனின் அறிவிப்பில் பல நிகழ்ச்சிகளை தொகுத்தார்.
காலம்  மறவாக் கலை வித்தகனை நாமும் மறவாமல் நினைப்போம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக