தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
புதன், 29 ஆகஸ்ட், 2012
பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்
குன்னூரில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இன்னும் 2 நாட்களில் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குன்னூரில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப வேண்டுமென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உள்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
குன்னூரில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து மத்திய இராணுவ மந்திரி அந்தோனியிடம் எடுத்துக் கூறினோம்.
இன்னும் 2 நாட்களில் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஈரானில் இருந்து பிரதமர் இந்தியா திரும்பியதும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக