ஞாயிறு, 11 நவம்பர், 2012

பரிதி கொல்லப்பட்டதால் பிரான்சில் உள்ள புலிகளது தளபதிகள் மூவர், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

விடுதலைப்புலிகள் இயக்கத் தளபதி பரிதி பாரிஸில் துப்பாக்கியால் News Serviceசுடப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்சில் உள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்த தளபதிகள் மூவர் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக, பிரான்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.கொல்லப்பட்ட தளபதி பரிதியும், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்தவர்.
பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் பொலிஸ் (police nationale) பிரிவிடமிருந்து DCRI பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. DCRI (Direction Centrale du Renseignement Int�rieur) பிரான்சின் உள்ளக புலனாய்வுப் பிரிவு.DCRI பிரிவு தகவல் தொடர்பாளர் Andr� Beauchamp, ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடங்கியுள்ளதாகவும், கொல்லப்பட்ட தளபதி ஏற்கனவே பிரான்ஸ் சிறையில் கைதியாக இருந்து தற்போது பெயிலில் உள்ளதால், அவர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், தற்போது கொல்லப்பட்ட பரிதியின் அமைப்பை சேர்ந்த மூவர் தமக்கு உயிராபத்து உள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, அந்த கோரிக்கையை தமது பிரிவு கவனிப்பதில்லை எனவும், கோரிக்கையை தாம் police nationale பிரிவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார் Andr� Beauchamp.
விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் பிரான்ஸ் தலைவர் பரிதி கொல்லப்பட்டுள்ளதால், அடுத்த நிலை தலைவர்கள், அதே அச்சுறுத்தல் தமக்கும் உள்ள காரணத்தால் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளார்கள் என்று தெரிகிறது.விடுதலைப் புலிகள் நெடியவன் அணி வட்டாரங்களில், தமது இரண்டாம் மட்ட தளபதிகள் தாக்கப்படும அபாயம் உள்ளதால், பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டது உண்மைதான் என தெரிவித்தார்கள். பாதுகாப்பு கொடுக்கப்படுமா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக