ஞாயிறு, 25 நவம்பர், 2012

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் சயனைட் நஞ்சு கலந்திருந்தமை கண்டுபிடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொஹில கிழங்கு கறியில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தமை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 16ம் திகதி நாடாளுமன்ற உணவகத்தில் சமைக்கப்பட்ட கொஹில கிழங்கு, பருப்பு சேர்க்கப்பட்ட உணவு வழங்கப்பட்டன. அதில் கொஹில கிழங்கு கறி வழமைக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத மரக்கறிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க சபாநாயகரால் உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு, பகுப்பாய்வு செய்து திணைக்களத்தினால் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில், கொஹில கிழங்கு கறியில் சயனைட் நஞ்சு கலந்திருந்தமை கண்டிறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற பொலிஸார் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக