புதன், 21 நவம்பர், 2012

நடவடிக்கைக்கு அமெரிக்கா தயங்காது! இலங்கை வந்த அலிஸ்ஸா கடும் எச்சரிக்கை

இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலவரங்கள் குறித்து முழுமையான திருப்தி அடைய முடியவில்லை. அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க என்றும் பின்னிற்காது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பு ஒன்றின்போதே உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சீசனும், தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் விரிவாகக் கேட்டறிந்த அலிஸ்ஸா ஐரிஸ், அரசியல் தீர்வு விடயம் தாமதமாவது குறித்து விரிவாகப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை கடந்த ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்ததாகத் தெரியவில்லை. இலங்கை தொடர்பில் அமெரிக்கா தினசரி கவனம் செலுத்தி வருகின்றது. அளிக்கப்பட உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அமெரிக்கா அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக