திங்கள், 10 டிசம்பர், 2012

கிளிநொச்சியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்: பொலிஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்யுமாறு கோரி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.கிளிநொச்சி பிரதேசசபைக்கு முன்னால் இடம்பெறும் இப்போராட்டத்தில், “கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய்”, “இராணுவமே வெளியேறு” போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பாதாதைகளை தாங்கியவாறும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஆறு கட்சிகள் கூட்டாக இணைந்து இப்போராட்டத்தினை நடாத்துகின்றன.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், புதிய மாக்சிஸ் லெனின் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக