ஆட்சியதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக, அரசு இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது: விக்ரமபாகு கருணாரத்ன
அரசாங்கம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எனவே ஆட்சியதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக சிங்கள பெளத்த இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று நவசம சமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இந்தியாவோ, அமெரிக்காவோ தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கப்போவதில்லையென்றும் அவர் கூறினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு எதிரான அரசு என்பதை மக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளதோடு அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அத்தோடு அரசாங்கம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இதிலிருந்து பாதுகாத்து ஆட்சியதிகாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சிங்கள பௌத்த இனவாதத்தை ஊக்குவித்து முஸ்லிம்களுக்கு எதிரான மதவாத்தை அரசு தூண்டிவிட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக