அமெரிக்காவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துமாறு மஹிந்த குடும்பம் பணித்துள்ளது. பமுக்கியமாக படைப்புலனாய்வாளர்கள், படையினர், மற்றும் ஒட்டுக்குழுக்களுக்கு இந்த பணிப்புக்கள் விடபப்ட்டுள்ளன. இதன்னைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் இராணுவப்புலனாய்வாளர்கள், படையினர், ஒட்டுக்குழுக்கள் ஆகியன பொதுமக்களை மிரட்டியும் வற்புறுத்தியும் கூடவே முன்னாள் போராளிகளை மிரட்டியும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள்.
.
இதன் ஒரு கட்டமாகவே மன்னார் கிளினொச்சி, கொழும்பு என ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்திலும் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முண்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, யாழ். வேம்படி வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி போன்ற பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
"எங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்", "அமெரிக்காவே வாயை மூடு"மற்றும் "எங்கள் தானைத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே" ஆகிய வாசகங்கள் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
.
தொடர்ந்தும் வரும் நாட்களில் சிங்கள அமைப்புக்கள் மற்றும் சிவில் உடை தரித்த படையினர் இந்த போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
.
இதன் ஒரு கட்டமாகவே மன்னார் கிளினொச்சி, கொழும்பு என ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்திலும் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முண்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, யாழ். வேம்படி வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி போன்ற பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
"எங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்", "அமெரிக்காவே வாயை மூடு"மற்றும் "எங்கள் தானைத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே" ஆகிய வாசகங்கள் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
.
தொடர்ந்தும் வரும் நாட்களில் சிங்கள அமைப்புக்கள் மற்றும் சிவில் உடை தரித்த படையினர் இந்த போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக