இந்திய லோக்சபாவில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பொறுப்பற்ற நழுவல் போக்கலான பதிலைத் தந்ததால் ஆந்திரமடைந்த திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியினரும் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் இன்று காலை முதல் பல்வேறு கட்சி எம்.பிக்களும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை, இனப்படுகொலையை சுட்டிக்காட்டி இந்திய அரசு , கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் இந்த விவாதத்தின் முடிவில் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வகை செய்வோம். 13-வது அரசியல் சாசன திருத்தத்தைத் தாண்டியும் கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுத் தருவோம்.இதைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மீண்டும் பேசத் தொடங்கிய போது, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா எழுந்து, தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்க வீடு கட்டிக் கடுத்தோம் என்று குர்ஷித் பேசினார். இதனால் பாஜகவினரும் அதிருப்தி அடைந்து கண்டனத்தையும் முழக்கத்தையும் பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக