இலங்கையில் அல்-கொய்தா மற்றும் ஜிகாத் போன்ற முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன என பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றது என அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மையாகும். எனவே அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்புக்களும் உடனடியாக செயற்பட்டு உள்நாட்டில் இயங்கும் முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களை அடியோடு வேரறுக்க வேண்டும். பல முஸ்லிம்கள் இந்தப் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளனர். உலமா சபை ஊடாகவே மேற்படி முஸ்லிம் பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இங்குள்ள அப்பாவி முஸ்லிம் குழந்தைகளை சவூதி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று மிகவும் மோசமான வகையில் அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிக்கின்றனர். பொதுபல சேனா ஏற்கனவே முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் செயற்படுகின்றன என்பதை தெட்டத் தெளிவாகக் கூறியிருந்தது. தற்போது அதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் இலங்கையில் குண்டுவெடிப்பதற்கு முன்னர் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களை நாட்டை விட்டுவிரட்டியடிக்க வேண்டும். இந்தக் குழுக்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்திலேயே செயற்படுகின்றன. அரசாங்கம் இந்த விடயத்தில் காலம் கடத்துவது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக