வெள்ளி, 26 ஏப்ரல், 2013

வடக்கில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அதிவேக ரயில் பாதைகள் நிர்மாணம்

வடபகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்டு வரும் ரயில் பாதைகள், மணிக்கு 120 கிலோமீற்றர் என்ற வேகத்தில் செல்லத் தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த வேலைத்திட்டத்தின் முகாமையாளர் எஸ்.எல்.குப்தா தெரிவித்துள்ளார்
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

மதவாச்சியில் இருந்து மன்னார் வரையான 43 கிலோமீற்றர் ரெயில் பாதை பூர்த்தி அடைந்துள்ளது.

இந்த பாதையின் சோதனை பணிகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டன.

இதில் மணிக்கு 120 கிலோமீற்றர் என்ற வேகத்தில் ரயில்கள் பயணிக்கலாம் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

252 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 800 மில்லியன் அமெரிக்க டொடர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக