திங்கள், 20 மே, 2013

பகிஸ்கரிப்பில் ஈடுபடும் பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரம் ரத்து: ரொசான் குணவர்தன அறிவிப்பு

பகிஸ்கரிப்பில் ஈடுபடும் பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரம் ரத்து: ரொசான் குணவர்தன அறிவிப்பு பணி பகிஸ்கரிப்பில் இணைந்து கொள்ளும் பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (19) நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பை மேற்கொள்ள இலங்கை பஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.

நூற்றுக்கு 10 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கை பஸ் சங்கத்தினால் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை பஸ் சங்கத்தினால் இன்று (19) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள பணி பகிஸ்கரிப்பில் தாம் இணைந்து கொள்ளப் போவதில்லை என தென் மாகாண பஸ் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக