தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும் இளைஞரணியை சேர்ந்தவருமான கஜதீபன் பயணித்த வாகனம் மீது கரம்பொன் ஊர்காவற்றுறை பகுதியில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் வைத்து கற்களால் எறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்தாக்குதலில் வாகனத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தபோதும் கஜதீபன் காயங்கள் இன்றி தப்பியுள்ளார்.தமக்கு வாக்களித்த அனலைதீவு மக்களுக்கு நன்றி சொல்ல போய்க்கொண்டிருந்ததாகவும் அவ்வேளை ஈ.பி.டி.பி.யினரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக