ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தொண்டமான் திகாம்பரம் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

அமைச்சர் தொண்டமான் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் திகாம்பரம் ஆதரவாளர்கள் சோடித்துக் கொண்டிருந்த போது, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக