யாழ்ப்பாணிகளை கிழக்கு மண்ணிலிருந்து அடித்து துரத்துவோம், கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவோமே ஒழிய யாழ்ப்பாணி களுக்கு இடமில்லை என கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் பிள்ளையான் மட்டக்களப்பு கல்லடியில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் தெரிவித்தான்.
ஊடகத்துறையை கேவலம் கெட்ட ஊடகத்துறை எனவும் தினக்குரல் வீரகேசரி போன்ற பத்திரிகைகளை யாழ்பாண மேலாதிக்கம்கொண்ட யாழ்பாணிகள் நடாத்துவதாகவும் பிள்ளையான் திட்டித் தீர்த்தான்
தானும் தனது கட்சியும் அரும்பாடுபட்டு உருவாக்கிய கிழக்கு மாகாணசபையை கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்து முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதற்கு குள்ளநரிகளான வடக்குத் தமிழர்கள் முயற்சிப்பதாகவும் அவர்கள் இங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான துரோகிகளுடன் சேர்ந்து எமது மண்ணுக்கே வந்து எமது மக்களிடம் தேசியம் பற்றிப் பேசுகிறார்கள் இவர்கள் தேசியம் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது.
நாங்கள் என்ன செய்வதென்று பொறுத்திருந்தோம் இல்லையென்றால் இந்தக் கூட்டத்தை அன்றே அடித்துத் துரத்தியிருப்போம் அதையும் நீங்கள் பிழையாக் விளங்கிக் கொள்வீர்கள் என நம்புகின்றேன் ஆகையால்தான் 9 ஆம் திகதிவரை பொறுத்திருக்கிறோம். 9ஆம் திகதிக்கு பின்னார் யாழ்ப்பாணிகளையும் அவர்களுடன் சேர்ந்திருப்பவர்களையும் அடித்து துரத்துவோம் என பிள்ளையான் தெரிவித்தான்.
தினக்குரல் வீரகேசரி பத்திரிகைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஆதரவான செய்திகளை கோடுகிறார்கள். இவர்கள் கேவல் கெட்டவர்கள். வீரகேசரி தினக்குரல் பத்திரிகைகளுக்கு பிரபாகரன்தான் எடிட்டர் நான் முதலமைச்சராக வந்தபோது சொன்னேன் நீங்க ஒரு பக்கச் சார்பாக இருக்காதங்களென்று அது மாத்திரமல்ல எமது விளம்பரங்களைக் கூட கலரை மாற்றிப் போடுகிறார்கள் கேவலம் கெட்டவர்கள் அவர்கள் அதனால்தான் அவர்களுடன் அதிகமாக நாங்கள் பேசுவதில்லை
மொத்தத்திலே யாழ்ப்பாணி என்று சொல்லுவோம் இவர்கள்; மற்றவர்களை ஆளவேண்டுமென வெறி பிடித்த மனிதர்கள் மக்களை ஏமாற்றி எம்பி பதவியை எடுத்துவிட்டு தங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு கொலசிப்பில் அனுப்பி மருத்துவராக்குவதற்கு துடிக்கும் கேவலம் கெட்டவர்கள்.
கூட்டமைப்பைச் சேர்ந்த சிறிதரன் என்ற எம்பி பேசினார் சிறையிலே தமிழ் கைதிகளை இராணுவம் அடித்துக் கொல்வதாக ஆனால் அது நடைபெற்ற சூழ்நிலையை அவர் சொல்லவில்லை அந்தக் கைதிகள் அங்கு மேற்கொண்ட வன்முறையினாலேயேதான் அது நிகழ்ந்தது இதுதான் உண்மை
அந்தக் கொலைசெய்யப்பட்ட கைதியானவர் இறுதி யுத்தத்தின்போது ஏன் சரணடைந்தார் உண்மையாக மண்ணுக்காக போராடி இருந்தால் எதிரியின் கையில் அகப்பட்டிருக்கமாட்டார் தனது ஆயுத்தால் தானே சுட்டுக்கொண்று தற்கொலை செய்திருப்பார் அல்லது சரணடைந்திருந்தாலும் சிறையிலே விடுதலையாகும்வரை பொறுமையாக இருந்திருப்பார்
எனவே சிறிதரன் போன்ற தமிழ் தேசிய வாதிகள் சிறையில் இருக்கும் தமிழ் கைதிகளுக்கு பொறுமையாக இருக்குமாறு புத்திமதிகளைக் கூறாமல் அவர்கள் மென்மேலும் வன்முறையில் ஈடுபட்டு தங்களது உயிரை விடுவதற்கு தூண்டுகிறார்கள்
ஆகவே எனதண்புமிக்க கல்லடிவாழ் மக்களே வடக்கு குள்ளநரிகளின் வீரவசனங்களைக் கேட்டு ஏமாறாமல் வருகிற தேர்தலில் எம்மை வெற்றிபெறச் செய்வதற்கு வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக