அரசியல் தீர்வு இழுத்தடிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்
நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பொறுப்பேற்க வேண்டுமென தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,
தேசிய பிரச்சினைக்கான தீர்வு பற்றி கலந்துரையாடவும் அது தொடர்பில் முடிவுகள் எடுக்கவும் உகந்த இடம் பாராளுமன்றமே என்பதே அரசின் நிலைப்பாடு. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்வு எதுவானாலும் அதனை அரசாங்கம் ஏற்று செயல்படும் என்பதை ஜனாதிபதி மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.
அடிக்கடி இந்தியா சென்று வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்துகொள்ள தயக்கம் காட்டுகின்றனர். எனவே தேசிய பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட அவர்கள்தான் காரணம்.
இதே நிலை தொடர்ந்தால் தேசிய பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கமே முன்வைக்கும். எனினும் அதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக