
இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர கூறுகையில்,போர் குற்ற விசாரணையில் இலங்கையை அடிப்பணிய வைக்க சர்வதேச நாடுகள் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டன. தற்போதும் அந்த முயற்சிகள் தொடங்குகின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்நாட்டு யுத்தத்தின்போது முறையாக செயற்படவில்லை எனக் கூறி இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்கள் தொடர்பில் புதிதாக அறிக்கையை தயாரிக்கும் முயற்சியில் சர்வதேச சதிக்காரர்கள் இறங்கியுள்ளனர். இவர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை நம்பாது சீனா ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சர்வதேச சவால்களை முறியடிக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக