திங்கள், 19 நவம்பர், 2012

இறுதி யுத்தத்தின் போது ஐ.நா ஒழுங்காக செயற்படவில்லை ஆனாலும் இலங்கை நேர்மையாகவே செயற்பட்டதாம்: - கூறுகிறார் குணதாஸ அமரசேகர

News Serviceஇலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்காக செயற்படவில்லை என்பது உண்மையாகும். ஆனால் உள்நாட்டு யுத்தம் நேர்மையாகவே நடைபெற்றது. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் உள்வீட்டுப் பிரச்சினைகளை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது முறையற்றதாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு எதிராக ஐ.நா.வும் மேற்குலக சக்திகளும் செயற்படுவகையில் கையை கட்டி, வாயை மூடிக்கொண்டு தொடர்ந்தும் இருக்காமல் அரசாங்கம் புத்திசாலித்தனமாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சர்வதேசத்தின் மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.


இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர கூறுகையில்,போர் குற்ற விசாரணையில் இலங்கையை அடிப்பணிய வைக்க சர்வதேச நாடுகள் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டன. தற்போதும் அந்த முயற்சிகள் தொடங்குகின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்நாட்டு யுத்தத்தின்போது முறையாக செயற்படவில்லை எனக் கூறி இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்கள் தொடர்பில் புதிதாக அறிக்கையை தயாரிக்கும் முயற்சியில் சர்வதேச சதிக்காரர்கள் இறங்கியுள்ளனர். இவர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை நம்பாது சீனா ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சர்வதேச சவால்களை முறியடிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக