அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஈ.சரவணபவன் உண்மை நிலைமையை நேரில் கண்டறியச் சென்றபோது அவருடைய வாகனம் இராணுவத்தினரின் முன்னிலையிலேயே தாக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார்? உயர்கல்வி அமைச்சர் இந்தச் சந்தர்ப்பத்தில் சபையில் இருக்கின்றார். உங்களுடைய உயர் கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவம் சென்றது எப்படி? இராணுவத்தை அங்கே அனுமதித்தது யார்? உயர் கல்வி அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் ஆண், பெண் மாணவர் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து படையினர் அட்டகாசம் புரிந்துள்ளனர். இராணுவத்தினரின் அடாவடித் தனங்களைக் கண்டித்து மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயே தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆனால் ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் அங்கு சென்று காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாம் இந்த சபையில் தவறான தகவல்களை வெளியிடுவதாக அரச தரப்பில் குற்றஞ் சுமத்துகின்றனர். நான் உங்களை, அழைக்கின்றேன். நீங்கள் என்னுடன் வாருங்கள் வந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக