வேலைப்பளுவின் இடையில் இந்த மாணவர் விவகாரம் தொடர்பாக தனக்கு முழு விபரம் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபற்றி எவரும் முழுமையாக விபரம் தெரிவிக்கவும் இல்லை. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தற்சமயம் நாட்டில் இல்லை. அவர்தான் இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்புவார். அவர் வந்தவுடன் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்சமயம் பல்கலைக்கழக விவகாரமாக இல்லாமல் பாதுகாப்பு அமைச்சு விவகாரமாக மாறியுள்ளதாக நான் சுட்டிகாட்டினேன். அதை ஏற்றுகொண்ட ஜனாதிபதி, எனினும் இதை பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் மூலமே தான் அணுக விரும்புவதாக சொன்னார். இந்த சம்பவங்கள் இனப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன என ஜனாதிபதி கூறினார். அத்தகைய நோக்கம் எனக்கு கிடையாது என்பதாலேயே இதை நான் நேரடியாக உங்களிடம் கூறுகிறேன் என நான் தெரிவித்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாக ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
திங்கள், 17 டிசம்பர், 2012
ஜேவிபி, புலி போராட்டங்கள் இரண்டும் வெவ்வேறு என்பதை மாணவர்களுக்கு கூறுங்கள்: மனோ கணேசனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
வேலைப்பளுவின் இடையில் இந்த மாணவர் விவகாரம் தொடர்பாக தனக்கு முழு விபரம் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபற்றி எவரும் முழுமையாக விபரம் தெரிவிக்கவும் இல்லை. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தற்சமயம் நாட்டில் இல்லை. அவர்தான் இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்புவார். அவர் வந்தவுடன் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்சமயம் பல்கலைக்கழக விவகாரமாக இல்லாமல் பாதுகாப்பு அமைச்சு விவகாரமாக மாறியுள்ளதாக நான் சுட்டிகாட்டினேன். அதை ஏற்றுகொண்ட ஜனாதிபதி, எனினும் இதை பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் மூலமே தான் அணுக விரும்புவதாக சொன்னார். இந்த சம்பவங்கள் இனப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன என ஜனாதிபதி கூறினார். அத்தகைய நோக்கம் எனக்கு கிடையாது என்பதாலேயே இதை நான் நேரடியாக உங்களிடம் கூறுகிறேன் என நான் தெரிவித்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாக ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக