வெள்ளி, 18 ஜனவரி, 2013

இடமாற்றங்கள் புதிய பிரதம நீதியரசரால் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

News Serviceபதவி விலக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மேற்கொண்ட நீதிபதிகளின் இடமாற்றங்கள் புதிய பிரதம நீதியரசரால் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அமுல்செய்யப்படவிருந்தன. இந்தநிலையில், புதிதாக நியமனம் பெற்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், குறித்த இடமாற்றங்களை ரத்துச்செய்துள்ளார். கொழும்பு மேல்நீதிமன்றம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நீதிபதிகள் இந்த இடமாற்ற பட்டியலில் உள்ளடங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக