அமரிக்க ஜனாதிபதி பெரெக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் வெளியுறவுக்கொள்கையில் முக்கிய பாத்திரத்தை கொண்டுள்ள பெற்றிக் லேஹி மற்றும் போப் கேசி (Bob Casey) ஆகியோரே இந்த கோரிக்கையை நேற்று விடுத்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் தமது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படு;த்த தவறியுள்ளது.
இதன்காரணமாக இலங்கை மக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் இலங்கையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று குறித்த செனட்டர்கள் இருவரும் கூறியுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் காலத்தாமதம் செய்வது ஒருபக்க நடவடிக்கையை உணர்த்துகிறது.
எனவே, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்தவேண்டும் என்று அமரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோரியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக