திங்கள், 21 ஜனவரி, 2013

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது - சிங்கள கட்சிகள்

News Serviceஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரான நவநீதம்பிள்ளையை இலங்கை வருவதற்கு அனுமதிக்கக் கூடாது என இலங்கையின் அரச தலைமையிடம் பல்வேறு தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடனும் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் நவநீதம்பிள்ளையை இலங்கைக்குள் அனுமதிப்பது ஆபத்தான விடயம் என குறித்த தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் இலங்கை வரவுள்ளனமையானது இலங்கை அரசுக்குப் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் எனவும் அரச தலைமையிடம் இந்தத் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக