செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பான் கி மூன் விசேட அறிவிப்பை வெளியிடுவார்

 சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், கற்றுக் கொண்டபாடங்கள் தொடர்பாகவும் பான் கி மூன் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
.
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்தார்.
.
இவ்விடயம் தொடர்பில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விரிவாக ஆராயப்படும் என அவர் தெரிவித்தார்.
.
இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ஐநா பொதுச் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வழங்குவார் என பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக