வியாழன், 7 பிப்ரவரி, 2013

ரணிலின் வேண்டுகோளிற்கு இணங்க சிங்கள - முஸ்லிம் பதற்றம் குறித்து அரசு அறிக்கை!

News Serviceஇலங்கையில் சிங்கள - முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சமய ரீதியான பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த அறிவிப்பு இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, தற்போது நாட்டில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் சமய ரீதியான பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் பதில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, இன்று அதற்கான பதில் வழங்கப்படும் என்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா அறிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக