வியாழன், 28 பிப்ரவரி, 2013

புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே?: கொழும்பில் சுவரொட்டிகள்!

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே? என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் கொழும்பில் காணப்படுகின்றன.
இது குறித்த சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் குறித்த சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த மூவரே இவ்வாறு முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக