சனி, 14 டிசம்பர், 2013

மனைவியின் சகோதரியை கடத்திச் சென்று பலாத்காரம்!

மனைவியின் சகோதரியை கடத்திச் சென்று பலாத்காரம்: 26 வயது இளைஞன் கைதுதனது மனைவியின் தங்கையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 26 வயதான இளைஞனை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் - கற்பிட்டி, நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றவேளை சிறுமியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னதாக தனது மனைவி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு தெரியாமல், சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் பொற்றோரினால் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட நாளிலிருந்து தாம் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வைத்திய பரிசோதனைகளுக்காக சிறுமி கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக